ஊட்டி அருகே சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - ஆட்சியர் அம்ரித் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் கையொப்பமிட்ட வாழ்த்து மடலை வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராம சமுதாயக் கூடத்தில், சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அம்ரித், அணிக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், பழங்குடியினர் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



மேலும், 5 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முதல்வர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல்களை வழங்கினார்.



இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ‘வாழ்க வளமுடன்' மகளிர் சுய உதவிக்குழுவிற்குத் தொழில் தொடங்குவதற்காக ரூ.15 லட்சத்திற்கான காசோலையினையும், சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்குப் புத்தாடைகளை வழங்கி, சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறப்பாகப் போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களைப் பாராட்டினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...