'விஸ்கோஸ் செயற்கை இழைக்கு குவிப்பு வரி வேண்டாம்..!' - மத்திய அரசுக்கு கோவை ஜவுளித்துறையினர் கடிதம்!

பஞ்சு விலையில் நிலையற்ற தன்மை நிலவும் சூழ்நிலையில் விஸ்கோஸ் செயற்கை இழை மீது குவிப்பு வரி விதித்தால் இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கும் என மத்திய நிதி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்களுக்கு ஜவுளித்தொழில் துறையினர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


கோவை: பஞ்சை பிரதான மூலப்பொருளாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்தொழில் அதன் விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை இழை ஜவுளித்துறையினருக்கு உதவி வருகிறது. இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைக்கு குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்தால் இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபாலிடம் கேட்டபோது,

செயற்கை இழை என்பது பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் என இரண்டு வகைப்படும். பஞ்சு விலை கடுமையாக உயர்வதும் அதற்கு பின் குறைவதும் என நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இதனால் நூற்பாலைகளில் விஸ்கோஸ் செயற்கை இழை சிறிதளவு பஞ்சுடன் கலந்து நூல் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை இழைக்கு குவிப்பு வரி விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் இந்திய ஜவுளித்தொழில் மிக கடுமையாக பாதிக்கப்படும்.

சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இந்தியாவில் ஒரே ஒரு தனியார் நிறுவனம் தான் விஸ்கோஸ் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குவிப்பு வரி விதிக்கப்பட்டால் அந்த ஒரு நிறுவனம் மட்டுமே மிகுந்த பயன்பெறும். இது ஏற்புடையதல்ல.

இது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ்கோயலிடம் கோரிக்கை மனுவாக அனுப்பியுள்ளோம், என்றார்.

மேலும், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழியிடம் கேட்டபோது,



“இந்திய பஞ்சு விலை சர்வதேச பஞ்சு விலையை விட கூடுதலாக உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஸ்கோஸ் செயற்கை இழை விலை மட்டுமே சர்வதேச விலைக்கு நிகராக உள்ளது. நூற்பாலைகளில் நூல் உற்பத்திக்கு செயற்கைஇழை சிறிதளவு சேர்த்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கைஇழைக்கு குவிப்பு வரி விதித்தால் இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.

ஏற்கெனவே பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை இழைக்கும் குவிப்பு வரி விதித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்” என்றார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...