பெங்களூரில் 112 அடி உயர ஆதியோகி சிலை நாளை திறப்பு - கோவை ஈஷா தகவல்

பெங்களூரு அடுத்த சிக்கபல்லாபுரத்தில் ஈஷா சார்பில் அமைக்கப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் மற்றும் கர்நாடக முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.


கோவை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 112 அடி உயரத்திலான ஆதியோகி சிலையை நாளை குடியரசு துணை தலைவர் ஜகதீப் தங்கர் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:



கோவை ஈஷா யோகா மையத்தில்‌ அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில்‌ 112 அடியில்‌ ஆதியோகி திருவுருவம்‌ ஜனவரி 15-ம்‌ தேதி திறக்கப்பட உள்ளது.



மகர சங்கராந்தி தினமான நாளை (ஜனவரி 15)‌ சத்குரு முன்னிலையில்‌ நடைபெறும்‌ இந்த விழாவில்‌, துணை குடியரசு தலைவர்‌ ஜகதீப்‌ தன்கர்‌ கலந்து கொண்டு,‌ ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைக்க உள்ளார்‌.

இந்த விழாவில்‌ கர்நாடக மாநில ஆளுநர்‌ தவார்‌ சந்த்‌ கெலாட்‌, கர்நாடக முதலமைச்சர்‌ பசவராஜ்‌ பொம்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர்கள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

இந்த பிரமாண்ட விழாவில்‌ சுற்றுவட்டார கிராம மக்கள்‌ உட்பட ஆயிரக்கணக்கான மக்கள்‌ கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவின்‌ ஒரு பகுதியாக, ஆதியோகி சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும்‌ கண்ணை கவரும்‌ ஆதியோகி திவ்ய தரிசனம்‌ நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

மேலும்‌, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்‌ மற்றும்‌ சவுண்ட்ஸ்‌ ஆப்‌ ஈஷா குழுவினரின்‌ கலை நிகழ்ச்சிகளும்‌ நடைபெறும்‌. இவ்விழாவை சத்குரு செயலி மற்றும்‌ சத்குரு யூடியூப்‌ சேனல்‌, பேஸ்புக்‌ மற்றும்‌ இன்ஸ்டாகிராம்‌ சேனல்களில்‌ நேரலையில்‌ காணலாம்‌.

முன்னதாக, ஆதியோகிக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார்‌. இதனிடையே கடந்த அக்டோபர்‌ மாதம்‌ அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மக்களின்‌ ஆன்மீக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில்‌ உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில்‌, ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில்‌ இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள்‌, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம்‌ ஸ்கூல்‌, ஈஷா லீடர்ஷிப்‌ அகாடமி ஆகிய கட்டமைப்புகளும்‌ படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...