கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் விழா - உறிடியத்து மகிழ்ந்த காவல் ஆணையர்..!

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உறியடித்தும் கயிறு இழுத்தும் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.



கோவை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைத் திருநாள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், பத்து ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக காவலர் பொங்கல் விழா வெகு விமர்சியாக கொண்டாப்பட்டது.



அலுவலக வளாகத்தில், வண்ணக் கோலாமிட்டு, பொங்கல் பானையில் பொங்கல் வைத்த உயர் காவல் அதிகாரிகள், "பொங்கலோ பொங்கல்" என குலவையிட்டு அசத்தினர்.



விழாவின் நிறைவு நிகழ்வாக பாரம்பரிய விளையாட்டுகளான உறியடிக்கும் நிகழ்வு, கயிறு இழுக்கும் போட்டியை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்து, அவரும் உறிடியத்து மகிழ்ந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:



வெளி ஊர் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்காமல் செல்ல மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 300 போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர முழுவதும் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் விதமாக ரோந்து பணி செல்ல காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால்,அவர்கள் மீது புகார்கள் வரும் பட்சத்தில் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதோடு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவலர் குடும்பங்கள் மிக மகிழ்வுடன் இந்த பொங்கலை கொண்டாடுவார்கள். சட்டம் ஒழுங்கை சரியாக இருக்க வைப்பதே பொங்கலை மகிழ்ச்சியாக்கும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...