கோவை ஆனைக்கட்டி அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை - விவசாயிகள் அச்சம்..!

ஆனைக்கட்டி அடுத்த கோபனாரி பகுதியில் வெங்கடேஷ் என்பவரது தோட்டத்தின் வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்த யானை, தோட்டத்தில் இருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.



கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இந்த காட்டு யானைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் கோவை ஆனைகட்டி கோபனாரி பகுதியில் உள்ள வெங்கடேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கம்பி வேலிகளை காட்டு யானை ஒன்று உடைத்துள்ளது.



இதையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த அந்த ஒற்றை யானை அங்கிருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.



இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யானைகள் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...