கோவை ஆனைக்கட்டி அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை - விவசாயிகள் அச்சம்..!

ஆனைக்கட்டி அடுத்த கோபனாரி பகுதியில் வெங்கடேஷ் என்பவரது தோட்டத்தின் வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்த யானை, தோட்டத்தில் இருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.



கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இந்த காட்டு யானைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் கோவை ஆனைகட்டி கோபனாரி பகுதியில் உள்ள வெங்கடேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கம்பி வேலிகளை காட்டு யானை ஒன்று உடைத்துள்ளது.



இதையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த அந்த ஒற்றை யானை அங்கிருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.



இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யானைகள் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...