கோவை கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயம்

கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியில் தாய் - தந்தை வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் சந்தியா (21) பள்ளிப்படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்றைய தினம் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டில் தனியாக இருந்த மகள் சந்தியாவை காணவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தியாவை அக்கம் பக்கத்தினர் வீடுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் கல்யாணசுந்தரம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் சந்தியாவை தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...