கோவை கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயம்

கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியில் தாய் - தந்தை வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் சந்தியா (21) பள்ளிப்படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்றைய தினம் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டில் தனியாக இருந்த மகள் சந்தியாவை காணவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தியாவை அக்கம் பக்கத்தினர் வீடுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் கல்யாணசுந்தரம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் சந்தியாவை தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...