கோவை கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயம்

கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியில் தாய் - தந்தை வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் சந்தியா (21) பள்ளிப்படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்றைய தினம் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டில் தனியாக இருந்த மகள் சந்தியாவை காணவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தியாவை அக்கம் பக்கத்தினர் வீடுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் கல்யாணசுந்தரம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் சந்தியாவை தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...