ஊட்டி அருகே முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா!

ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருடன் இணைந்து பொங்கல் வைத்து, முதியோருக்கு பொங்கல் வழங்கி உற்சாகபடுத்தினார்.



குறிப்பாக அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள அனைவரிடமும் நேரடியாக உரையாடி அவர்களிடம் நலம் விசாரித்து பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் தஸ்தகீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...