கிணத்துக்கடவு அருகே சமத்துவ பொங்கல் விழா - மக்களுடன் ஆட்சியர் கும்மியடித்து மகிழ்ச்சி!

கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சமீரன், பொதுமக்களுடன் கும்மியடித்து மகிழ்ச்சி.


கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை வரவேற்கும் விதமாகச் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் வடசித்தூர் பகுதி சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும், சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.



இந்த விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஷ்அகமது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சி பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு கும்மியடித்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, வாலிபால் போட்டியிலும் பொதுமக்களோடு கலந்து விளையாடினர். இதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட வீடுகளும் ஆய்வு செய்தனர். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...