கோவை, திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் - நிரந்தரமாக இயக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி வழியாகத் திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பொங்கல் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை.


கோவை: பல்லாண்டு கோரிக்கையை ஏற்று கோவையில் இருந்து பழனி வழியாக திண்டுக்கலுக்கு பொங்கல் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயிலை நிரந்தமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையிலிருந்து பழனி வழியாகத் திண்டுக்கல்லுக்கு விழாக்கால சிறப்பு ரயில் விட வேண்டும் என பல்வேறு தரப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுத் தென்னக ரயில்வே இன்று முதல் 18ஆம் தேதி வரை கோவை- திண்டுக்கல்- கோவை, பொங்கல் விழாக்கால சிறப்பு ரயிலை இயக்கப்படுகிறது.

இந்த ரயில் காலை 09.20 மணிக்குக் கோவையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்குத் திண்டுக்கல்லைச் சென்றடையும். மறுபடியும் பிற்பகல் 2 மணி திண்டுக்கல்லில் புறப்பட்டு மாலை 5.30 மணிக்குக் கோவையை வந்தடையும். இந்த ரயில் போத்தனூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கடந்த காலங்களில் இந்த ரயில், கோவையில் இருந்து திண்டுக்கல் வரையில் இயக்கப்பட்டு வந்தது. தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் உதவிக்கரமாக இருந்தது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோர், இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென இந்த ரயில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று கோவையில் இருந்து பழனி வழியாக திண்டுக்கலுக்கு பொங்கல் சிறப்பு ரயிலாக விடப்பட்டுள்ளது. இந்த ரயிலைப் பழனியில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறும் தை பூச விழா வரைக்கும் இயக்க வேண்டும். இதுமட்டுமன்றி கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...