திருப்பூர் திருமுருகன்பூண்டியில் 4வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயின் வால்வு உடைந்ததால், சாலையில் தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கென, மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டுவரப்பட்டு திருப்பூர் முழுவதும் வினியோகம் செய்யப்படவுள்ளது.
தற்போது சோதனை முயற்சியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில், திருமுருகன்பூண்டி பகுதியில் குடிநீர் கொண்டுவரப்படும் பிரதான குழாயின் வால்வு பழுதடைந்ததால், சாலையில் அருவிபோல் குடிநீரான ஆர்ப்பரித்துக் கொட்டியது.

இதனால், அந்தச் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாயை உடனடியாக சீர்செய்து, குடிநீர் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கென, மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டுவரப்பட்டு திருப்பூர் முழுவதும் வினியோகம் செய்யப்படவுள்ளது.
தற்போது சோதனை முயற்சியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், திருமுருகன்பூண்டி பகுதியில் குடிநீர் கொண்டுவரப்படும் பிரதான குழாயின் வால்வு பழுதடைந்ததால், சாலையில் அருவிபோல் குடிநீரான ஆர்ப்பரித்துக் கொட்டியது.
இதனால், அந்தச் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாயை உடனடியாக சீர்செய்து, குடிநீர் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.