திருப்பூரில் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு - சாலையில் தோன்றிய திடீர் அருவி..!

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் 4வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயின் வால்வு உடைந்ததால், சாலையில் தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென, மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டுவரப்பட்டு திருப்பூர் முழுவதும் வினியோகம் செய்யப்படவுள்ளது.

தற்போது சோதனை முயற்சியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.



இந்த நிலையில், திருமுருகன்பூண்டி பகுதியில் குடிநீர் கொண்டுவரப்படும் பிரதான குழாயின் வால்வு பழுதடைந்ததால், சாலையில் அருவிபோல் குடிநீரான ஆர்ப்பரித்துக் கொட்டியது.



இதனால், அந்தச் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாயை உடனடியாக சீர்செய்து, குடிநீர் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...