திருப்பூரில் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு - சாலையில் தோன்றிய திடீர் அருவி..!

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் 4வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயின் வால்வு உடைந்ததால், சாலையில் தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென, மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டுவரப்பட்டு திருப்பூர் முழுவதும் வினியோகம் செய்யப்படவுள்ளது.

தற்போது சோதனை முயற்சியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.



இந்த நிலையில், திருமுருகன்பூண்டி பகுதியில் குடிநீர் கொண்டுவரப்படும் பிரதான குழாயின் வால்வு பழுதடைந்ததால், சாலையில் அருவிபோல் குடிநீரான ஆர்ப்பரித்துக் கொட்டியது.



இதனால், அந்தச் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாயை உடனடியாக சீர்செய்து, குடிநீர் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...