திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதேபோல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் முதல் முறையாகப் பொங்கல் வைத்து மருத்துவர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

இந்த விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குக் கலை நிகழ்ச்சி, கோலப்போட்டி, ஓவியப்போட்டி, மியூசிக்கல் சேர், உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

மேலும் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் தலைமையில் பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் முதல் முறையாகப் பொங்கல் வைத்து மருத்துவர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
இந்த விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குக் கலை நிகழ்ச்சி, கோலப்போட்டி, ஓவியப்போட்டி, மியூசிக்கல் சேர், உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
மேலும் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் தலைமையில் பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.