பல்லடம் அருகே பணம் கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளர் கைது

பல்லடம் அருகே பணிபுரியும் இடத்தில் ரூ.9 லட்சம் பணத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரம் கருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வி.



இவர் சுவாதி லட்சுமி என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பள்ளபாளையத்தைச் சேர்ந்த ஆண்டனி பெர்னார்ட் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். டிரான்ஸ்போர்டில் சரக்குகளை ஏற்றுவது, வாடகை வசூலிப்பது மற்றும் டெக்ஸ்டைல்ஸில் தயாரான துணிகளை விற்பனை செய்வது என நிர்வாகம் முழுவதையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிறுவனத்திற்கு வரும் பணத்தில் ரூ.9 லட்சத்தைக் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனையடுத்து தாமரைச்செல்வி அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆண்டனி பெர்னார்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...