பல்லடம் அருகே பணம் கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளர் கைது

பல்லடம் அருகே பணிபுரியும் இடத்தில் ரூ.9 லட்சம் பணத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரம் கருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வி.



இவர் சுவாதி லட்சுமி என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பள்ளபாளையத்தைச் சேர்ந்த ஆண்டனி பெர்னார்ட் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். டிரான்ஸ்போர்டில் சரக்குகளை ஏற்றுவது, வாடகை வசூலிப்பது மற்றும் டெக்ஸ்டைல்ஸில் தயாரான துணிகளை விற்பனை செய்வது என நிர்வாகம் முழுவதையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிறுவனத்திற்கு வரும் பணத்தில் ரூ.9 லட்சத்தைக் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனையடுத்து தாமரைச்செல்வி அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆண்டனி பெர்னார்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...