மாமன்ற உறுப்பினர்களுக்கு நற்சான்றிதழ் - பட்டியல் அளிக்க கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயல்படும்‌ மாமன்ற உறுப்பினர்களின் பட்டியல்‌ தயாரித்து அளிக்கும்படி மண்டல உதவி ஆணையர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ உத்தரவு.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களைப் பாராட்டி குடியரசு தினவிழாவில்‌, நற்சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு மண்டலத்திற்கு ஒரு மாமன்ற உறுப்பினர்‌ வீதம்‌ 5 மண்டலத்திற்கு 5 மாமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அவர்களின்‌ பெயர்‌ பட்டியலை எதிர்வரும்‌ 19ஆம்‌ தேதிக்குள்‌ ஆணையர்‌ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்‌.

மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்ததற்கு 10 மதிப்பெண்‌, மாமன்ற கூட்டத்தில்‌ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியதற்கு 5 மதிப்பெண்‌, நமக்கு நாமே திட்டத்துக்கான பங்களிப்பு 10 மதிப்பெண்‌, திடக்கழிவு மேலாண்மைத்‌ திட்டம்‌ செயலாக்கத்தில்‌ பங்களிப்புக்கு 10 மதிப்பெண்‌, பொது ஒதுக்கீட்டு இடம்‌ மீட்பு மற்றும்‌ பராமரிப்பு பணியில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, வரிவசூலிப்புப்‌ பணிகளில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, பொதுமக்களிடையே நன்மதிப்புக்கு 5 மதிப்பெண்‌ என மொத்தம்‌ 50 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்‌.

மாமன்றத்திற்கு வருகை, ஆக்கப்பூவமான ஆலோசனை ஆகியவற்றுக்கான மதிப்பெண்கள்‌ மாமன்ற செயலாளர்‌ மூலம்‌ அனைத்து வார்டுகள்‌ குழு உதவி ஆணையர்களுக்கும்‌ தனியாக அனுப்பி வைக்கப்படும்‌.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...