காவல் நிலையங்களில் ‘சாலை பாதுகாப்பு பொங்கல்’- கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் 17ஆம் தேதி “சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகை” கொண்டாடப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி



கோவை: இந்தியாவில், சாலை விதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி, கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் தொடங்கியது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று கோவை மாநகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் தன்னார்வ தொண்டு அமைப்புடன், மாநகர காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நிகழ்வில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடன அசைவுகளுடன் வாகன ஒட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.



அதேபோல், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

கோவை மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்சி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை முகாம், வரும் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி கோவை மாநகர் முழுவதும் அந்தந்த காவல் நிலையங்களில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற உள்ளனர்.

மேலும், வரும் 17ஆம் தேதி பொங்கல் பண்டிகையை “சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகை”ஆக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுடன் இணைந்து கொண்டாடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...