தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தமிழகம், தமிழ்நாடு என்று வார்த்தை பயன்பாடு, சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்போக்கு வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் தண்டபாணி, அருள்மொழி, மயில்வாகனம், சுந்தரமூர்த்தி, சிவன் ஞானம் ,சிவகாமி தமிழன், ஜோதி குமார் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் தண்டபாணி கூறியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்துகொள்ள தவறிவிட்டார். ஆளுநர் தமது விருப்பம்போல் சனாதனம், பார்ப்பனியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோசமான எடுத்துக்காட்டான நடவடிக்கையை நடத்தியிருக்கிறார்.
கடந்த ஒரு வருடமாகவே ஆளுநரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானதாகவே இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகியும் நாட்டிற்கு சனாதனம்தான் தேவை என்று ஆளுநர் கூறிவருகிறார்.
ஆளுநரின் இத்தகைய போக்கைக் கண்டித்தும், ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு, விரைவில் தமிழ்நாட்டிற்கான ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதுதான் மக்களின் அடிப்படையான கோரிக்கை.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்போக்கு வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் தண்டபாணி, அருள்மொழி, மயில்வாகனம், சுந்தரமூர்த்தி, சிவன் ஞானம் ,சிவகாமி தமிழன், ஜோதி குமார் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் தண்டபாணி கூறியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்துகொள்ள தவறிவிட்டார். ஆளுநர் தமது விருப்பம்போல் சனாதனம், பார்ப்பனியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோசமான எடுத்துக்காட்டான நடவடிக்கையை நடத்தியிருக்கிறார்.
கடந்த ஒரு வருடமாகவே ஆளுநரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானதாகவே இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகியும் நாட்டிற்கு சனாதனம்தான் தேவை என்று ஆளுநர் கூறிவருகிறார்.
ஆளுநரின் இத்தகைய போக்கைக் கண்டித்தும், ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு, விரைவில் தமிழ்நாட்டிற்கான ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதுதான் மக்களின் அடிப்படையான கோரிக்கை.
இவ்வாறு, அவர் கூறினார்.