தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகம், தமிழ்நாடு என்று வார்த்தை பயன்பாடு, சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



இதில் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்போக்கு வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் தண்டபாணி, அருள்மொழி, மயில்வாகனம், சுந்தரமூர்த்தி, சிவன் ஞானம் ,சிவகாமி தமிழன், ஜோதி குமார் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.



அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் தண்டபாணி கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்துகொள்ள தவறிவிட்டார். ஆளுநர் தமது விருப்பம்போல் சனாதனம், பார்ப்பனியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோசமான எடுத்துக்காட்டான நடவடிக்கையை நடத்தியிருக்கிறார்.

கடந்த ஒரு வருடமாகவே ஆளுநரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானதாகவே இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகியும் நாட்டிற்கு சனாதனம்தான் தேவை என்று ஆளுநர் கூறிவருகிறார்.

ஆளுநரின் இத்தகைய போக்கைக் கண்டித்தும், ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு, விரைவில் தமிழ்நாட்டிற்கான ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதுதான் மக்களின் அடிப்படையான கோரிக்கை.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...