கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர், பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவ படிப்பை தொடர விசா கிடைக்காததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதி கற்குவேல் அய்யணன்- ஹேமா. இவர்களது மகன் ஹரிஹரன்(21), பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.டி. மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்தியா வந்த நிலையில், மீண்டும் பிலிப்பைன்ஸ் செல்ல விசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 3 மாதமாக விசா கிடைக்காததால், ஹரிஹரன் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஹரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் போலீசார், ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல விசா கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காரணமாக இந்தியா வந்த நிலையில், மீண்டும் பிலிப்பைன்ஸ் செல்ல விசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 3 மாதமாக விசா கிடைக்காததால், ஹரிஹரன் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஹரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் போலீசார், ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல விசா கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.