கோவை கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி வழிப்பறி - இளைஞர் கைது!

கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரை மறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற கோவில்பட்டியை சேர்ந்த செண்பகராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது நண்பரை சந்திப்பதற்காக நேற்று முன் தினம் கவுண்டம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், ராஜாவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், அவரது கழுத்தில் கத்தியை வைத்து, “என் மேல நிறைய கேஸ் இருக்கு, நீ சத்தம் போடாம உன்கிட்ட இருக்க பணத்தை எடு” என்று கூறி மிரட்டியுள்ளார்.

அப்போது, அவ்வழியாக ஒருவர் வருவதை கண்ட மர்ம நபர், சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்றும், யாரிடமாவது இதை சொன்னால் தேடி வந்து கொன்றுவிடுவேன் என ராஜாவை மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், ராஜா இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்றைய தினம் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அந்த நபர், கோவில்பட்டியை சேர்ந்த செண்பகராஜ் என்பது தெரியவந்தது.

மேலும் ராஜாவை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட செண்பகராஜ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...