கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த மர்ம கும்பல் அங்குள்ள வீடுகளை நோட்டமிடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில்கருமத்தம்பட்டி, சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள், தோட்டங்களுக்குள்தனியே இருக்கும் வீடுகளில் திருட முயற்சித்துள்ளனர்.
வீட்டின் கூறையின்மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கவும் முயற்சித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அங்குள்ள வட மாநில நபரிடம் செல்போன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிந்ததோடு, வீட்டின் கூறையின் மேல் ஏறி நோட்டம் விடும்சிசிடிவி காட்சிகள், கோவையில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல்துறையினர், 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.