'நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை' - எஸ்.பி எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக கி.பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலக அரங்கில் இன்று அவர் ஆலோசனை மேற்கொண்டார்.



இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 6 தாலுகாக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், "நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் (குட்கா, பான்பராக் மற்றும் புகையிலை) போன்ற பொருட்களை வியாபாரிகள் விற்க வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.



முன்னதாக வியாபாரிகள் மற்றும் வணிகர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...