'நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை' - எஸ்.பி எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக கி.பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலக அரங்கில் இன்று அவர் ஆலோசனை மேற்கொண்டார்.



இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 6 தாலுகாக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், "நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் (குட்கா, பான்பராக் மற்றும் புகையிலை) போன்ற பொருட்களை வியாபாரிகள் விற்க வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.



முன்னதாக வியாபாரிகள் மற்றும் வணிகர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...