திருப்பூர் குமரன் 91வது நினைவுநாள் - உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 91வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் மரியாதை செய்தனர்.



கோவை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இன்னுயிர் ஈந்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் குமரனின் 91வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.



இதையொட்டி, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தியாகி குமரனின் திருவுருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், காங்கிரஸ் கமிட்டியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனைத் தொடர்ந்து குமரன் சாலையில் உள்ள தியாகி குமரன் உயிர் நீத்த இடத்திலும் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பள்ளிக் குழந்தைகளும் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...