திருப்பூர் குமரன் 91வது நினைவுநாள் - உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 91வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் மரியாதை செய்தனர்.



கோவை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இன்னுயிர் ஈந்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் குமரனின் 91வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.



இதையொட்டி, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தியாகி குமரனின் திருவுருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், காங்கிரஸ் கமிட்டியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனைத் தொடர்ந்து குமரன் சாலையில் உள்ள தியாகி குமரன் உயிர் நீத்த இடத்திலும் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பள்ளிக் குழந்தைகளும் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...