பொங்கல்: கோவை - திண்டுக்கல் சிறப்பு இரயில் இயக்கம் - தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சேவை துவங்க வலுக்கும் கோரிக்கை

கோவையிலிருந்து பழனி வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி18ம் தேதிவரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



அதேநேரத்தில், கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பழனி வழியாக இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி கோவையிலிருந்து தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த ரயில்களின் சேவையை மீண்டும் தொடர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி,

1. கோவையிலிருந்து தென்காசி, திருநெல்வேலிக்கு வராந்திர ரயில்சேவை 2022ல் தொடங்கப்பட்டது. இந்த சேவை 95% பயணிகளுடன் மிகவும் பயனுள்ளதாகவும், நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த ரயிலை வாரத்திற்கு 3 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கோவையிலிருந்து மதுரைக்கு தினசரி ரயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தச் சேவையை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போல், முன்பதிவு மற்றும் ஏசி சேர்கார் வசதிகளுடன் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

3. கோவையிலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டுவந்த ரயிலானது, சென்னை வழியாக கோவை - திருவனந்தபுரம், மங்களூரு, சென்னை வழியாக மதுரை-கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர் என தென்னக ரயில்வேயின் இரண்டு முக்கிய வழித்தடங்களை இணைத்தது. இந்த ரயில் சேவையை பயணிகள் நலன்கருதி தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், இரவு நேரங்களில் கோவையிலிருந்து பழனி வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்களை இந்தாண்டு முதல் மீண்டும் இயக்க வேண்டும் எனவும் ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...