பொங்கல்: கோவை - திண்டுக்கல் சிறப்பு இரயில் இயக்கம் - தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சேவை துவங்க வலுக்கும் கோரிக்கை

கோவையிலிருந்து பழனி வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி18ம் தேதிவரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



அதேநேரத்தில், கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பழனி வழியாக இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி கோவையிலிருந்து தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த ரயில்களின் சேவையை மீண்டும் தொடர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி,

1. கோவையிலிருந்து தென்காசி, திருநெல்வேலிக்கு வராந்திர ரயில்சேவை 2022ல் தொடங்கப்பட்டது. இந்த சேவை 95% பயணிகளுடன் மிகவும் பயனுள்ளதாகவும், நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த ரயிலை வாரத்திற்கு 3 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கோவையிலிருந்து மதுரைக்கு தினசரி ரயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தச் சேவையை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போல், முன்பதிவு மற்றும் ஏசி சேர்கார் வசதிகளுடன் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

3. கோவையிலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டுவந்த ரயிலானது, சென்னை வழியாக கோவை - திருவனந்தபுரம், மங்களூரு, சென்னை வழியாக மதுரை-கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர் என தென்னக ரயில்வேயின் இரண்டு முக்கிய வழித்தடங்களை இணைத்தது. இந்த ரயில் சேவையை பயணிகள் நலன்கருதி தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், இரவு நேரங்களில் கோவையிலிருந்து பழனி வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்களை இந்தாண்டு முதல் மீண்டும் இயக்க வேண்டும் எனவும் ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...