'கோடங்கிபாளையத்தில் கல்குவாரி அமைக்கலாமா..?' - மக்களுடன் திருப்பூர் ஆட்சியர் ஆலோசனை!

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக்கணிப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது.



இதில் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கல்குவாரி அமைக்கப்படுவதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், கால்நடைகள் வளர்ப்பதும் கேள்விக்குறியாகும் என்பதால் கல்குவாரி அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



கல்குவாரி உரிமையாளர்கள் சார்பில், குவாரி அமைப்பதால், விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாதுகாப்பு முறைகளும் பின்பற்றியே அமைக்கப்பட இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வினீத், அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...