கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரணியை குறைத்து மதிப்பிடாமல் அரசின் சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன் எனவும், கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Coimbatore: கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்து பேசியதாவது: "யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. அரசின் சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்."

இன்று காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். ஓரணியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்" என்றார்.

"தமிழக மக்கள் திமுகவுக்கு பிரம்மாண்டமான வெற்றியை வழங்க தயாராக இருக்கிறார்கள். கடந்த முறை 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்திருந்தது. இதனால் கரூரில் போட்டியிட்ட என்னை கோவையில் போட்டியிட முதலமைச்சர் MK Stalin வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைப்போம்" என்றார்.

AIADMK வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக கூறியது குறித்து பதிலளித்த செந்தில் பாலாஜி, "அவர்கள் தோற்று விடுவோம் என்றா சொல்லப் போகிறார்கள்? கடந்த முறை முதலமைச்சர் கோவை வந்தபோது பம்ப்செட் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் விவசாயிகளுக்கு பம்பு செட்டுகள் புதிதாக மாற்றி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்" என்றார்.

"எனக்கு கோவை வேறு கரூர் வேறு அல்ல. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது கோவை தொகுதியை எனக்கு வழங்கியுள்ளனர். அதிலும் கட்டாயம் வெற்றி பெறுவேன். 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளை கோவையில் திமுக இழந்தது. அதன் பின்பு AIADMK எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும்" என்றார்.

கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், "பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து செயல்படுத்துவோம். கோவையில் GD Naidu மேம்பாலம், செம்மொழி பூங்கா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

"நான் எந்த வேட்பாளரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் MK Stalin சாதனைகளை கூறி அதனால் பலர் அடைந்த மற்றும் பலனடைய போகும் பயனாளிகளை எங்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவோம்" என அவர் தெரிவித்தார்.
இன்று காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். ஓரணியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்" என்றார்.
"தமிழக மக்கள் திமுகவுக்கு பிரம்மாண்டமான வெற்றியை வழங்க தயாராக இருக்கிறார்கள். கடந்த முறை 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்திருந்தது. இதனால் கரூரில் போட்டியிட்ட என்னை கோவையில் போட்டியிட முதலமைச்சர் MK Stalin வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைப்போம்" என்றார்.
AIADMK வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக கூறியது குறித்து பதிலளித்த செந்தில் பாலாஜி, "அவர்கள் தோற்று விடுவோம் என்றா சொல்லப் போகிறார்கள்? கடந்த முறை முதலமைச்சர் கோவை வந்தபோது பம்ப்செட் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் விவசாயிகளுக்கு பம்பு செட்டுகள் புதிதாக மாற்றி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்" என்றார்.
"எனக்கு கோவை வேறு கரூர் வேறு அல்ல. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது கோவை தொகுதியை எனக்கு வழங்கியுள்ளனர். அதிலும் கட்டாயம் வெற்றி பெறுவேன். 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளை கோவையில் திமுக இழந்தது. அதன் பின்பு AIADMK எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும்" என்றார்.
கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், "பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து செயல்படுத்துவோம். கோவையில் GD Naidu மேம்பாலம், செம்மொழி பூங்கா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.
"நான் எந்த வேட்பாளரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் MK Stalin சாதனைகளை கூறி அதனால் பலர் அடைந்த மற்றும் பலனடைய போகும் பயனாளிகளை எங்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவோம்" என அவர் தெரிவித்தார்.