நீலகிரி உதகை - மஞ்சூர் நெடுஞ்சாலையில் உலா வந்த சிறுத்தைகள் : வாகன ஓட்டிகள் அச்சம்..!

உதகை - மஞ்சூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், 2 சிறுத்தைகள் அடுத்தடுத்து சாலையை கடந்து சென்றதை கண்டு அச்சமடைந்த நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 67 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி கிராம பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இதனால் இரவு நேரங்களில் முக்கிய மலைப் பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கரடிகளையும், சிறுத்தைகளையும் காணும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.



இந்த நிலையில் நேற்றிரவு உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்துள்ளனர்.



இதனை காரில் இருந்த நபர்கள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...