நீலகிரி உதகை - மஞ்சூர் நெடுஞ்சாலையில் உலா வந்த சிறுத்தைகள் : வாகன ஓட்டிகள் அச்சம்..!

உதகை - மஞ்சூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், 2 சிறுத்தைகள் அடுத்தடுத்து சாலையை கடந்து சென்றதை கண்டு அச்சமடைந்த நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 67 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி கிராம பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இதனால் இரவு நேரங்களில் முக்கிய மலைப் பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கரடிகளையும், சிறுத்தைகளையும் காணும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.



இந்த நிலையில் நேற்றிரவு உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்துள்ளனர்.



இதனை காரில் இருந்த நபர்கள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...