கோவையில் விற்பனைக்குத் தயாராகும் வண்ண வண்ணப் பொங்கல் பானைகள்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் பண்டிகைகளில் முக்கியமானது தைப்பொங்கல். ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

அறுவடைத் திருநாள் என்று கூறப்படும் இந்த பொங்கல் பண்டிகையின்போது, மண்பானைகளில் பொங்கல் செய்து, கரும்பு, மஞ்சள் வைத்து படையலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது மரபு.



அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மண்ணால் ஆன பொங்கல் பானைகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.



தரமான களிமண்ணை தேர்வு செய்து, பல கட்டங்களாகப் பக்குவப்படுத்தி இந்த மண்பானைகள் உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் மண்பானைகளை சுமார் ஒரு வாரம் வரை நிழலில் காயவைத்து, பின்னர் சூளையில் வைத்து சுட்ட பிறகே அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாறுகிறது.

இந்த மண்பானைகளை அப்படியே விற்பனை செய்துவந்த காலம்போய், தற்போது மக்களின் ரசனைக்கு ஏற்ப அவற்றை அழகுபடுத்தி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் விற்பனையாளர்கள்.



அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனைக்கு தயாராக உள்ள மண்பானைகளை அழகுபடுத்தும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ண சாயங்களைக் கொண்டு பானைகளை விதவிதமாக அழகுபடுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அவற்றை சாலையோரங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர்.



நவீன யுகத்தில் பொங்கல் வைப்பதற்கு பித்தளை, செம்பு, எவர்சில்வர் என எத்தனையோ வகையான உலோகங்களில் பொங்கல் பானைகள் கிடைத்தாலும், இன்றும் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளுக்கான மவுசு இன்னும் குறையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...