ஆளுநரின் உருவ பொம்மை எரித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்க..! - கோவையில் பாஜகவினர் போராட்டம்

கோவையில் தமிழக ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற முயற்சிப்பதாகவும், சட்டப்பேரவை விதிகளை மீறுவதாகவும், ஜனநாயக மரபுகளை கடைபிடிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறி அவரின் உருவ பொம்மை மற்றும் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.



இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்குக் கண்டனம் தெரிவித்து சித்தாபுதூரில் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று, தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் உருவபொம்மையை எரித்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பாஜகவிர் அப்போது வலியுறுத்தினர்.



இதையடுத்து, அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறுகையில், "திராவிடர் கட்சியினர் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மாநிலச் சட்டத்திற்கும் புறம்பானது. இச்செயல் தமிழகத்திற்கு அவமானத்தைத் தேடித்தரும். திக மற்றும் திமுகவினரின் உந்துததாலேயே இந்தச் செயல் நடந்துள்ளது. உருவபொம்மை எரிப்பில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...