ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி திராவிடர் இயக்க தமிழர் பேரவையினர், கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு அளித்த குறிப்புகளை முழுமையாக படிக்காமலும், பல்வேறு வாக்கியங்களை தவிர்த்த நிகழ்விற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ரவியை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ரவியை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.