திருப்பூரில் பட்டப் பகலில் ராமலிங்கம் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை மர்மநபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் செல்வராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(79). இவர் தனது இருசக்கர வாகனத்தில், எம் எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்றுள்ளார்.
அப்போது ஸ்டோருக்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு, வாகனத்திலிருந்த பணத்தை எடுப்பதற்காக, சீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் வங்கி ஆவணங்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் சீட்டை திறந்து பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது ஸ்டோருக்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு, வாகனத்திலிருந்த பணத்தை எடுப்பதற்காக, சீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் வங்கி ஆவணங்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் சீட்டை திறந்து பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.