திருப்பூர் பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீக்கிரையாகின

பல்லடம் அடுத்த சின்ன வடுகபாளையம் பகுதியில் உள்ள பஞ்சு அரவை ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு ஆகியவை தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சின்ன வடுகபாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில், பழைய இயந்திரங்கள், மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அங்கு செல்வதற்குள் தீ மளமளவென அங்கிருந்த இயந்திரங்களில் பரவியது.



இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூடுதலாக மூன்று தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இச்சம்பவத்தில், பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இயந்திரங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...