திருப்பூர் பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீக்கிரையாகின

பல்லடம் அடுத்த சின்ன வடுகபாளையம் பகுதியில் உள்ள பஞ்சு அரவை ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு ஆகியவை தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சின்ன வடுகபாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில், பழைய இயந்திரங்கள், மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அங்கு செல்வதற்குள் தீ மளமளவென அங்கிருந்த இயந்திரங்களில் பரவியது.



இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூடுதலாக மூன்று தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இச்சம்பவத்தில், பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இயந்திரங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...