பிடிபட்டது PM2 மக்னா யானை! - நிம்மதியில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துவந்த PM2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, பாடந்தொரை, வாழவயல் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக PM2 மக்னா சுற்றித் திரிந்தது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய PM2 மக்னா யானை, அரிசி போன்ற உணவு பொருட்களையும் சாப்பிட்டு வந்தது.

மேலும், பொதுமக்கள் 2 பேரையும் அடித்துக்கொன்றதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் PM2 மக்னா யானையை வனத்துறை உடனடியாகப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த மாதம் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பிடிபட்ட யானையானது முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல பகுதியில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், PM2 மக்னா மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் கேரளா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அப்போது, முத்தங்கா வனப்பகுதிக்குள் நுழைந்த PM2 மக்னா யானை, வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி நகரினுள் புகுந்து ஒருவரை தாக்கியது.



இதையடுத்து, கேரளாவிலும் அட்டூழியத்தைத் தொடங்கிய PM2 மக்னா யானையைப் பிடிக்க அம்மாநில வனத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை PM2 மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்டது.



மேலும், இந்த யானையை முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பரமாரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. PM2 மக்னா யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்த கேரள அரசு மற்றும் வனத்துறைக்கு அம்மாநில மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...