கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செல்வபுரம் காலனியில் பள்ளிகள், தேவாலயங்கள், நியாய விலைக்கடைக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு.
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செல்வபுரம் காலனியில் பள்ளிகள், தேவாலயங்கள், நியாயவிலைக்கடை உள்ள பகுதியில் மதுபான கடை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள், மதுபான கடை அமைக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சியின் 25 வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். இதனிடையே சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.
டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிராக மனு அளிக்க வந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள், மதுபான கடை அமைக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சியின் 25 வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். இதனிடையே சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.
டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிராக மனு அளிக்க வந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.