'டாஸ்மாக் கடை வேண்டாம்..!'- கோவை செல்வபுரம் பகுதி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செல்வபுரம் காலனியில் பள்ளிகள், தேவாலயங்கள், நியாய விலைக்கடைக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செல்வபுரம் காலனியில் பள்ளிகள், தேவாலயங்கள், நியாயவிலைக்கடை உள்ள பகுதியில் மதுபான கடை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள், மதுபான கடை அமைக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சியின் 25 வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். இதனிடையே சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.

டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.



எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிராக மனு அளிக்க வந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...