தனியார் கல்லூரியில் கோவை விழா - உறியடி, சமையல் போட்டியுடன் கொண்டாட்டம்

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கோவை விழாவில், பாரம்பரிய உணவுகளை சமைத்தும், உறியடி நடத்தியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோயம்புத்தூர் விழா 2023 நடைபெற்றது. யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் இணைந்து பாரம்பரிய சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டிகளில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



பாரம்பரிய சமையல் போட்டியில் , 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பங்கேற்று விறகு அடுப்பில், மண்பானைகளைக் கொண்டு சமைத்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், விறகு அடுப்பு மற்றும் மண்சட்டிகளை பயன்படுத்தி திருவாதிரை களி, கம்பு அடை, கேப்பை ரொட்டி போன்ற பல பாரம்பரிய உணவுகளை மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் செய்து பார்வையாளர்களை அசத்தினர்.



போட்டியாளர்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை, கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து ருசித்துப் பார்த்து பரிசுபெறும் மாணவ-மாணவியர் குழுக்களைத் தேர்வு செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கு யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் சார்பில் பணப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாரம்பரிய உறியடிப் போட்டியில், 250-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்று, தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு ஆர்வத்தோடு உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பானைகளை குச்சியால் உடைத்து அங்கிருந்த பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...