10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன்

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பிராமணர் சங்க மாநாட்டிற்கு பின்னர் பேசிய நாராயணன், சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



கோவை: கோவை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். தரமான கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாத்தல், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், சங்கத்தின் சேவைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்துதல், மகளிர் நலன் மற்றும் அவர்களை வலிமைபடுத்துதல் இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது.

மேலும், வணிகம் மற்றும் தொழில் முனைவோர் பலம் பேணுதல், சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் சங்கத்தில் இணைய செய்தல், உயர்கல்வி ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் ஆலோசனை, பிரம்மா சமுத்திரத்திற்கு அனைவருக்கும் சென்றடையும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.



இந்த மாநாட்டிற்கு பின்னர் மாநில தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்ததை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை கோவில்களில் தன்னாட்சி வாரியம் அமைக்கப்பட வேண்டும். கேரளா அரசு போல நலிந்தோர்க்கு நலவாரியத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



இந்த நிகழ்வில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், டாக்டர் அஸ்வின் மோகன், பேராசிரியர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...