திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக மாரத்தான்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கு நிதி திரட்டும் வகையில், திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூரில் மாரத்தான் போட்டியை இன்று நடத்தியது.



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர் சிக்கன்னா கல்லூரியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி கணியம்பூண்டி வரை சென்று மீண்டும் சிக்கன அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் 21, 10 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாகவும், 5 கிலோமீட்டர் வாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது.



சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...