திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக மாரத்தான்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கு நிதி திரட்டும் வகையில், திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூரில் மாரத்தான் போட்டியை இன்று நடத்தியது.



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர் சிக்கன்னா கல்லூரியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி கணியம்பூண்டி வரை சென்று மீண்டும் சிக்கன அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் 21, 10 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாகவும், 5 கிலோமீட்டர் வாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது.



சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...