திருப்பூரில் கை, கால்களை கட்டிப்போட்டு வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் கைது - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார், சிறையில் இருந்தபோது தாங்கள், கஞ்சா பயன்படுத்துவதை போலீசாரிடம் காட்டிக் கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கள்ளம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித் குமார்(23) என்பதும், ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், திருப்பூரில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த வல்லரசு (24), திருப்பூரை சேர்ந்த கணேசன் (26) மற்றும் ஷாஜகான் (25) ஆகிய மூன்று பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட அஜித் குமாரும் கைது செய்யப்பட்ட மூவரும் கோவை மத்திய சிறையில் ஒன்றாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூன்று பேரும் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை நிர்வாகத்திடம் அஜித் குமார் காட்டி கொடுத்துள்ளார்.

இதனால் அஜித்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மூவரும், ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அஜித்குமாரை வரவழைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...