திருப்பூரில் கை, கால்களை கட்டிப்போட்டு வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் கைது - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார், சிறையில் இருந்தபோது தாங்கள், கஞ்சா பயன்படுத்துவதை போலீசாரிடம் காட்டிக் கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கள்ளம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித் குமார்(23) என்பதும், ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், திருப்பூரில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த வல்லரசு (24), திருப்பூரை சேர்ந்த கணேசன் (26) மற்றும் ஷாஜகான் (25) ஆகிய மூன்று பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட அஜித் குமாரும் கைது செய்யப்பட்ட மூவரும் கோவை மத்திய சிறையில் ஒன்றாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூன்று பேரும் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை நிர்வாகத்திடம் அஜித் குமார் காட்டி கொடுத்துள்ளார்.

இதனால் அஜித்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மூவரும், ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அஜித்குமாரை வரவழைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...