கோவை வழியாக மீன் வண்டியில் மறைத்து வைத்து கேரளாவுக்கு 200 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது..!

ஆந்திராவில் இருந்து கோவை வழியாக மீன் லோடு வண்டியில் மறைத்து வைத்து கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் துறையினர், மயிலாடுதுறையை சேர்ந்த இருவர் கைது.


கோவை: ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு குறிப்பிட்ட வாகனத்தில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் வாளையார் அருகே கண்காணிப்பில் ஈடுபட்ட கலால் துறையினர், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தை துரத்தி சென்று, நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.



அப்போது மீன் லோடு ஏற்றிச் சென்ற அந்த வாகனத்தில், மீன் பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்திச் சென்றது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மூட்டைகளில் இருந்த சுமார் 200 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனத்தில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து கோவை வழியாக மீன் லோடு வண்டியில் கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ கஞ்சாவை கலால் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...