கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா-வில் ஆட்சியர் சமீரன் ஆய்வு

கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: துடியலூரில் உள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய சேவை நிறுவனத்தில் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி பிரிவு. விவசாய உபகரணப் பிரிவு, பெட்ரோல் பங்க் பிரிவு, விதை பிரிவு, அச்சகப் பிரிவு, பொது சேவை மையம், நுண்ணூட்டச் சத்து உரப்பிரிவு, சில்லறை விற்பனை பிரிவு செக்கு எண்ணெய் பிரிவு, ஆவின் பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன.



அதில், உரத் தயாரிப்பு பிரிவு, வேப்ப புண்ணாக்கு உற்பத்தி பிரிவு, நுண் ஊட்டச்சத்து உரப்பிரிவு, விதைப்பிரிவு, பூச்சிக்கொல்லி மருந்து பிரிவு மற்றும் சங்கத்தின் சேவை பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்து, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் கேட்டறிந்தார். பொருட்கள் தரமாக உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.



மேலும் வேளாண்மை துறையின் உற்பத்தி தடை நீங்கி மீண்டும் ஒதுக்கீடு பெற்று துவங்கப்பட்ட கலப்பு உரத்தயாரிப்பு பிரிவின் விற்பனையினை துவக்கி வைத்தார்.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியுகாஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவகுமார், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி, கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...