ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா விழா - களைக்கட்டிய தோடர்களின் பாரம்பரிய நடனம்

ஊட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனத்தை ஒட்டி நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் தோடர் பழங்குடியின ஆண்கள் ஒன்று கூடி ஆடிய பாரம்பரிய நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.



நீலகிரி: ஊட்டியிலிருந்து முத்தொரை பாலாடா செல்லும் சாலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டிற்கான 111-ஆம் ஆண்டு ஆரூத்ரா விழா நேற்று தொடங்கியது.



அதனை தொடர்ந்து இன்று அதிகாலை தேரின் வடத்தை பிடித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடக்கி வைத்தார். தேரை நீலகிரி மாவட்டத்தின் பூர்வ குடிகளான தோடர் பழங்குடியின ஆண்கள் கோவிலில் இருந்து உதகை மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக ஊட்டி மாரியம்மன் கோவிலுக்கு இழுத்து வந்தனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன. அதனை தொடர்ந்து தோடர் இன பழங்குடியின ஆண்கள் மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தியவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடையுடன் நடனமாடியது சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் பவானீஷ்வரர் தேர் காப்பி ஹவுஸ் சந்திப்பு வரை சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லபடுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...