ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா விழா - களைக்கட்டிய தோடர்களின் பாரம்பரிய நடனம்

ஊட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனத்தை ஒட்டி நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் தோடர் பழங்குடியின ஆண்கள் ஒன்று கூடி ஆடிய பாரம்பரிய நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.



நீலகிரி: ஊட்டியிலிருந்து முத்தொரை பாலாடா செல்லும் சாலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டிற்கான 111-ஆம் ஆண்டு ஆரூத்ரா விழா நேற்று தொடங்கியது.



அதனை தொடர்ந்து இன்று அதிகாலை தேரின் வடத்தை பிடித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடக்கி வைத்தார். தேரை நீலகிரி மாவட்டத்தின் பூர்வ குடிகளான தோடர் பழங்குடியின ஆண்கள் கோவிலில் இருந்து உதகை மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக ஊட்டி மாரியம்மன் கோவிலுக்கு இழுத்து வந்தனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன. அதனை தொடர்ந்து தோடர் இன பழங்குடியின ஆண்கள் மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தியவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடையுடன் நடனமாடியது சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் பவானீஷ்வரர் தேர் காப்பி ஹவுஸ் சந்திப்பு வரை சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லபடுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...