சாலையில் நடந்து சென்றவரை தாக்கும் யானை - பரபரப்பான சிசிடிவி வீடியோ

கூடலூர் பகுதியில் பிடித்து சீகூர் வனப்பகுதியில் விடப்பட்ட பிஎம்-2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பத்தேரி நகரில் புகுந்து ஒருவரை தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சுற்றி திரிந்த பிஎம்-2 மக்னா யானை, 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதபடுத்தியதுடன் 2 பேரையும் தாக்கி கொன்றுள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வன பகுதியில் விடபட்டது. ஆனால் அந்த யானை முதுமலை வழியாக கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனையடுத்து கும்கி யானைகளின் உதவியுடன் கர்நாடக வன பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை திடீரென. கேரளா மாநில எல்லையில் உள்ள முத்தங்கா வனப்பகுதிக்குள் சென்றது.

முத்தங்கா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்த அந்த யானை இன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்தது.



முக்கிய சாலைகளில் உலா வந்த அந்த யானை அதிகாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவரை தாக்கியது. அதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அந்த யானை வேறு பகுதிக்கு ஓடியது. இதனிடையே மக்னா யானை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...