சாலையில் நடந்து சென்றவரை தாக்கும் யானை - பரபரப்பான சிசிடிவி வீடியோ

கூடலூர் பகுதியில் பிடித்து சீகூர் வனப்பகுதியில் விடப்பட்ட பிஎம்-2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பத்தேரி நகரில் புகுந்து ஒருவரை தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சுற்றி திரிந்த பிஎம்-2 மக்னா யானை, 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதபடுத்தியதுடன் 2 பேரையும் தாக்கி கொன்றுள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வன பகுதியில் விடபட்டது. ஆனால் அந்த யானை முதுமலை வழியாக கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனையடுத்து கும்கி யானைகளின் உதவியுடன் கர்நாடக வன பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை திடீரென. கேரளா மாநில எல்லையில் உள்ள முத்தங்கா வனப்பகுதிக்குள் சென்றது.

முத்தங்கா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்த அந்த யானை இன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்தது.



முக்கிய சாலைகளில் உலா வந்த அந்த யானை அதிகாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவரை தாக்கியது. அதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அந்த யானை வேறு பகுதிக்கு ஓடியது. இதனிடையே மக்னா யானை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...