'பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்க்க வேண்டும்..!' - கோவை துடியலூரில் பாஜக போராட்டம்

பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை துடியலூரில் பாஜக விவசாய அணி சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



கோவை: தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழக அரசை வலியுறுத்தி, "விலையில்லா தேங்காய் வழங்கும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக துடியலூரில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



அப்போது பேசிய ஜி.கே.நாகராஜ், தென்னை விவசாயிகளின் வாழ்வதாரத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் தேங்காயின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு மதிய உணவில் தேங்காய் பால் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேங்காய் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.



பாஜக நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...