கோவை கணுவாயில் அதிமுக எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழக அரசு சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதைக் கண்டித்து, பல்வேறு கட்டங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 5ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும், 6ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே 2ம் கட்ட போராட்டமானது நடைபெற்றது.



அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசின், சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவதி நிலையில் உள்ள சாலை பராமரிப்பு, மின்விளக்குகள் பராமரிப்பு போன்றவற்றில் உள்ள அரசின் குறைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், தாலிக்கு தங்கம் ரத்து, மாணவர்களுக்கு மடிகணினி ரத்து, மாணவர்களுக்கான மிதிவண்டி ரத்து, மகளிர்களுக்கு வழங்கப்பட்ட அம்மா மானிய விலை ஸ்கூட்டர் ரத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் ரத்து, ஏழை, எளிய மக்களுக்கான அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை தொடர்ந்து மூடிவருவது போன்ற கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலதிட்டங்களை அரசியல் காழ்புணர்ச்சியுடன் முடக்கியதாக கூறி திமுக அரசை கண்டித்தும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் ஒன்றிய செயலாளர்கள் கே.வி.என்.ஜெயராமன், கோவனூர் துரைசாமி, ஊராட்சி தலைவர்கள் ரவி, ரமேஷ், ரங்கராஜ், தடாகம் செளந்திரவடிவு ஆனந்தன், கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...