கோவை கிணத்துக்கடவு அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயம் - பரபரப்பு..!

கிணத்துக்கடவு அடுத்த சங்கராயபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சங்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது சகோதரி சகுந்தலாவின் மூத்த மகள் மாலதியை சிறுவயதில் இருந்தே தன் வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த மூன்றாம் தேதி மாலை செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கவுசல்யா ஆகியோர் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மாலதி காணாமல் போனது தெரியவந்தது.

பல இடங்களில் தேடி பார்த்தும் மாலதி கிடைக்காததால் நேற்று மாலை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான மாலதியை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...