நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்துவர தடை

ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்து வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கால்நடை பராமரிப்பு துறை எச்சரித்துள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வருகின்றன.



உடற்கூறு ஆய்வில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்றினால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்திய நிலையில், ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வீரியம் குறையும் வரை வளர்ப்பு பன்றிகளை வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வரவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடை மருத்துவ குழு ஆய்வு மேற்கொண்டதில் எந்த பண்ணைகளிலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறிகளோ நோய் தொடர்பான இறப்புகளோ எதுவும் இதுவரை இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வளர்ப்பு பன்றி பண்ணைகளை சுற்றி வேலிகள் அமைத்து காட்டுப்பன்றிகள் பண்ணையில் நுழையாதவாறும், பண்ணையைச் சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும் கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...