கோவை கிணத்துக்கடவு அருகே குடும்ப பிரச்சினையில் பெண் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு..!

கிணத்துக்கடவு ஆதித்யா அவென்யூ பகுதியில் கணவர் சரியாக கவனித்துக் கொள்ளாமல், செலவுக்கு பணம் தராமல் இருந்ததால் மனமுடைந்த பெண் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள ஆதித்யா அவென்யூ விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தவர் ராதா. இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு உதகையை சேர்ந்த குணா என்பவருடன் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே அவர் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் டைலர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு சுப்பையா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ராதாவும் சுப்பையாவும் கிணத்துக்கடவு ஆதித்யா அவென்யூ பகுதியில் உள்ள தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக சுப்பையா, ராதாவை சரியாக கவனிக்காமல், செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த ராதா நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராதாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...